கிளிநொச்சியில் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்தவருக்கு தண்டம்
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் தொலைபேசியில் ஆபாச படக்காட்சிகளை வைத்திருந்தவருக்கு 2500 ரூபா தண்டம் விதித்ததுடன், அவருடைய கைத்தொலைபேசியிலுள்ள காணொளியை அழித்து தொலைபேசியினை அரசுடைமையாக்குமாறும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் உத்தரவிட்டார்.
மேற்படி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கைத்தொலைபேசியில் ஆபாசப்படக்காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் புதன்கிழமை; (19) கைதுசெய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரை புதன்கிழமை (19) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதிவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.
கிளிநொச்சியில் தொலைபேசியில் ஆபாசப்படம் வைத்திருந்தவருக்கு தண்டம்
Reviewed by NEWMANNAR
on
February 21, 2014
Rating:
(13).jpg)
No comments:
Post a Comment