மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து இன்று 3 எலும்புக்கூடுகள் மீட்பு: 70 ஆக அதிகரிப்பு
திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் இருந்து இன்று புதன் கிழமை மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் இது வரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.
மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் அனுராத புரம் சட்ட வைததிய நிபுணர் டி.எல். வைத்தியரெட்ண தலைமையில் 26 வது தடவையாக இன்று புதன் கிழமை குறித்த மனித புதை குழியின் அகழ்வுப்பணிகள் இடம் பெற்றது. இதன் போது மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.
-இந்த நிலையில் இன்று வரை மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் தொகை 70 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் மேலும் 4 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பொதி செய்யப்பட்டு மன்னார் நீதவானின் உத்தரவிற்கமைவாக மன்னார் பொது வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதுவரையில்51 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் வைததியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நாளை 27 ஆவது தடவையாக மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மனித புதைகுழி தோண்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியில் இருந்து இன்று 3 எலும்புக்கூடுகள் மீட்பு: 70 ஆக அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
February 19, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 19, 2014
Rating:


No comments:
Post a Comment