அக்கரபத்தனையில் தந்தையும் மகனும் தற்கொலை
நுவரெலியா அக்கரபத்தனை பொலிஸ் பிரிவின் கிளாசோ பிரிவின் ஆக்குரோவா தோட்டத்தில் வசித்து வந்த தந்தையும் மகனும் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
39 வயதான குலதாசன் என்பவரும் அவரது மகனான 9 வயதான திவோஜ் என்ற சிறுவனும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் நேற்றிரவு வீட்டில் தனிமையில் இருந்துள்ளதுடன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர்களின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக குலதாசன் என்பவர் இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சித்திருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் 9 வயதான சிறுவன் தானே தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தந்தை அவரை கொலை செய்தாரா என்பது சந்தேகத்திற்குரியது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
குலதாசன் என்பவரின் மனைவிக்கு ஒரு பெண் பிள்ளை இருப்பதுடன் தாயும் மகளும் குடும்பத்தையும் உறவினர்களை விட்டு பிரிந்து தனித்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அக்கரபத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
.
அக்கரபத்தனையில் தந்தையும் மகனும் தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
March 07, 2014
Rating:

No comments:
Post a Comment