அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்தின் (Newmannar.com) அனுசரணையுடன் தழல் இலக்கியவட்டத்தின் மகளிர் தின நிகழ்வு - படங்கள் இணைப்பு

மன்னார் தழல் இலக்கிய வட்ட இலக்கியத் தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த மகளிர்தின நிகழ்வானது இன்று ( 16/03/2014) காலை 10 மணிக்கு கலைஅருவி மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வருகை நேர விரிவுரையாளர் பண்டிதர்.ம.ந.கடம்பேஸ்வரன், செல்வி.கோதை பரதலோஜினி (தமிழ் ஆசிரியர் – மன்/உயிலங்குளம் றோ.க.த.க.பாடசாலை), திருமதி.வதனி (கலாச்சார அலுவலர்), செல்வி ஜெயசீலி (இசை ஆசிரியர் – மன்/ புனித சவேரியார் பெண்கள் கல்லூரி), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். தமிழ்மொழி வாழ்த்துடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் திரு. தேவா மகளிர் தினம் பற்றிய அறிமுக உரையை ஆற்றினார்.

கவிஞர் மயூரனின் தலைமையில் மகளிர்தினக் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் மன்/அல் அஸ்கர் தேசிய பாடசாலையின் மாணவிகளான ஏ.சஸ்லா, பி.எப்.சிபா, டி.தர்சிகா, எம்.ஜே.ஜஸ்ரின், எம்.எஸ்.எப்.சஹ்லா, எச்.எப்.ஹஸ்னா ஆகியோர் பங்குபற்றி சிறப்பாக கவிதைகளை வாசித்தனர். இசை ஆசிரியை சி.பி.ஜெயசீலியின் மாணவிகளான வீ.அனித்தா, ரா.பிரசாந்தினி, ம.பிரவீனா, எஸ்.ஜீன் ஏஞ்சலின், ஆர்.கே.மக்கலின் ஜூலியட், ஏ.இம்மானிவேலி, டி.தமிழினி ஆகியோர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கீர்த்தனையையும், பாரதியார் பாடல், மத்திம காலக் கீர்த்தனை, சஞ்சாரி கீதம் ஆகியவற்றை சிறப்பாக இசைத்தனர்.

மன்னார் பரத கலாலயா நாட்டியப் பள்ளி மாணவர்களான மிதுசா, கவிஷாலினி, நிதுசன், நிசி, அபிலாஷ், சுஜிபன் ஆகியோர் பங்குபற்றிய ஒயிலாட்டம் மிகச்சிறந்த சமுதாயக் கருத்துக்களைக் கொண்டதாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மன்/புனித சவேரியார் கல்லூரி மாணவி செல்வி.நிசா “ மகளிருக்கு எதிரான வன்முறைகள்” பற்றிய உரையையும், தலையுரையை எழுத்தாளர் வெற்றிச் செல்வியும் ஆற்றினர்.

பண்டிதர் ம.ந.கடம்பேஸ்வரனின் “இலக்கண மரபு” எனும் ஆய்வுநூல் பற்றிய சிறப்புப்பார்வையை ஆசிரியை.கோதை பரதலோஜினி ஆற்றினார். புதிய தளம் இலக்கிய சஞ்சிகை பற்றிய அறிமுக உரையை திரு. காந்தன் ஆற்றினார். மன்னார் அமுதனும், வெற்றிச்செல்வியும்  நெறிப்படுத்திய இந்நிகழ்வில் www.newmannar.com செய்தித்தளத்தின் அனுசரனையுடன் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்விற்கான தேநீர் உபசரனையை திருமதி.சுஜானா அப்துல்ரகுமான் அவர்கள் வழங்கி உதவினார்.
































மன்னார் இணையத்தின் (Newmannar.com) அனுசரணையுடன் தழல் இலக்கியவட்டத்தின் மகளிர் தின நிகழ்வு - படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on March 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.