யாழ்.தேவிக்கான ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்தவர் ரயிலில் மோதி பலி
யாழ்.தேவிக்கான ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்தவர் குடும்பஸ்தர் ஒருவர், ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
நேற்று, புகையிரதப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த நபர், புகையிரதம் வந்து கொண்டிருந்த வேளையில் பாதுகாப்பற்ற புகையிரதப்பாதையூடாக A9 வீதிக்கு செல்ல முட்பட்ட போது எதிரே வந்த புகையிரதத்தில் மோதுண்டுள்ளார்.
கொடிகாமம் பெரிய நாவலடியை சேர்ந்த சிவராஜா ஜெகன் (வயது 32) -என்பவரே இவ்வாறு மோதுண்டதாகவும் பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த நபர் சிகிச்சை பலன் இன்றி மரணமடைந்ததாக எமது வைத்தியசாலை செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்.தேவிக்கான ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்தவர் ரயிலில் மோதி பலி
Reviewed by NEWMANNAR
on
March 16, 2014
Rating:

No comments:
Post a Comment