அண்மைய செய்திகள்

recent
-

யாழ். சிவில் பாதுகாப்பு குழுக்கள் – கிராம உத்தியோகத்தர்கள் இடையே கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட ஒன்பது பொலிஸ் நிலையங்களின் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் இன்று முற்பகல் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் வட மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்னர்.

நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, வேலணை, யாழ்ப்பாணம், நல்லூர், கோப்பாய், சண்டிலிப்பாய், சங்கானை, உடுவில், தென்மராட்சி, காரைநகர் ஆகிய பிரதேச செயலகங்களின் கிராம உத்தியோகத்தர்களும் இதில் பங்குபற்றியிருந்தனர்.

நெடுந்தீவு, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம், வட்டுக்கோட்டை, மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளின் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
யாழ். சிவில் பாதுகாப்பு குழுக்கள் – கிராம உத்தியோகத்தர்கள் இடையே கலந்துரையாடல் Reviewed by NEWMANNAR on March 08, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.