அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் வங்காலையில் உணவை கொடுத்து சிறுவர்கள் துஸ்பிரயோகம்.

தோசை வாங்கித்தருவதாக ஆசை காட்டிய நபரொருவர் இரு சிறுவர்களை பற்றைக்குள் அழைத்துச்சென்றுபாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று மன்னார் வங்காலை கிராமத்தில் கடந்த வாரம் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,

வங்காலை பஸ்ரியன்புரி கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த ஒருவர் அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்களுக்கு தோசை வாங்கித்தருவதாக கூறி அழைத்துச்சென்றுள்ளார்;

அவரது ஆசை வார்த்தைகளை நம்பிய 9மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களும் அவருடன் சென்றுள்ளனர்.

தோசையை வாங்கி அவர்களுக்கு சாப்பிடக்கொடுத்த பின்னர் அருகிலிருந்த பற்றைக்குள் அவர்களை அழைத்துச்சென்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து இவ்விடயம் தொடர்பாக அவர்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யதனர். 

இந்த நிலையில் மன்னார் பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து மன்னார் நீதி மன்றில் ஆஜர் படுத்தினர்.

-இதன் போது குறித்த வழக்கினை விசாரணை  செய்த பதில் நீதவான் குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மன்னார் வங்காலையில் உணவை கொடுத்து சிறுவர்கள் துஸ்பிரயோகம். Reviewed by NEWMANNAR on March 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.