கல்வி பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன
எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி கல்வி பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கல்வி பொதுதராதர சாதாரணத்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் முடிவடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், 2013ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடம்பெற்ற தேர்வுகளில் 600,000 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.
அத்துடன், விசேட தேவையுடைய மாணவர்கள் 500 பேர் கடந்த ஆண்டு இடம்பெற்ற தேர்வில் தோற்றியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வி பொதுத்தராதர சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகவுள்ளன
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment