அண்மைய செய்திகள்

recent
-

சர்வமதத் தலைவர்களுக்கான கலந்துரையாடல் -படங்கள்

சர்வமதத் தலைவர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை 4.00 மணியளவில் மன்னார் மறைமாவட்ட சமூகத்தொண்டு அருட்பணிமையமாகிய கலையருவியில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலை மன்னார் மறைமாவட்ட சர்வமத மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணைக்குழு ஏற்பாடு செய்திருந்தார்.

குறித்த கலந்துரையாடல்கள் அருட்தந்தை தழிழ் நேசன் தலைமையில் நடைபெற்றது
இதன்போது கொழும்பிலிருந்து மன்னாருக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த தேசிய கத்தோலிக்க சர்வமத மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆணைக்குழுவினருக்கும் மன்னார் மாவட்ட சர்வமத மற்றும் சமூக தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

குறித்த சந்திப்பில் ஆயர்களான மன்னார் மறைமாவட்ட ஆயர் வண.இராயர்பு ஜோசப் ஆண்டகை, கொழும்பு உயர் மறை மாவட்டத்தின் உதவி ஆயர் வண.இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை, இரத்தினபுரி மறைமாவட்ட ஆயர் வண.கிளிற்றஸ் பெரேரா ஆண்டகை,மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை,அருட்சகோதரி மற்றும் மன்னார் மாவட்டத்தின் சர்வமத தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

இதன்போது மதங்களிடையே ஜக்கியத்தை ஏற்ப்படுத்துவது மற்றும் தென்பகுதி மக்களிடம் ஜக்கியத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய அனுகுமுறைகள் மற்றும் சிங்கள ஊடகங்களின் வட மாகாண செய்திகள் வெளியிடப்படுவதில் உள்ள குறைகள் மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கலந்தரையாடலின் நிறைவில் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைதந்த அருட்தந்தையர்களுக்கு நினைவு சின்னங்களை மன்னார் சர்வமதத்தலைவர்கள் வழங்கி கௌரவித்தனர்.














சர்வமதத் தலைவர்களுக்கான கலந்துரையாடல் -படங்கள் Reviewed by Author on March 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.