அண்மைய செய்திகள்

recent
-

இரா­ணு­வத்­தி­னரின் அதி­க­ரித்த பிர­சன்­னத்தை நியா­யப்­ப­டுத்த விடு­தலைப்புலிகள் பற்றிய புரளியை கிளப்பிவிட்டுள்ளது அரசு. .விக்­கி­னேஸ்­வரன்.

வட புலத்தில் தற்­போது நிலை­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரின் அதி­க­ரித்த பிர­சன்­னத்தை நியா­யப்­ப­டுத்தும் வகை­யி­லேயே தமி­ழீழ விடு­தலைப்புலிகள் மீண்டும் தலை­தூக்கிவரு­கின்­றனர் என்ற புரளி நாட்டில் தற்­போது கிளப்பிவிடப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­வித்­துள்ள வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், மேற்­படி கட்­டுக்­கதை மிகவும் தரங்­குன்­றி­ய­தெ­னவும் பொலிஸ்­காரர் ஒருவர் மீது துப்­பாக்­கிச்­சூடு நடாத்தி அவரைக் காயப்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் சந்­தேக நப­ரான கோபியை கைது செய்­வ­தி­லான தாமதம் பற்­றிய விடை காணா வினாக்கள் தொடர்ந்தும் எழுந்த வண்­ணமே உள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்­ளது.

இந்­திய ஆங்­கில நாளிதழ் "த ஹிந்து" வுக்கு அளித்­துள்ள செய்­தி­யொன்றின் போதே மேற்­கண்­ட­வாறு கருத்து வெளி­யிட்­டுள்ள விக்­கி­னேஸ்­வரன், வட­பு­லத்தில் உள்ள இரா­ணு­வத்­தி­னரை முகாம்­க­ளுக்குள் முடக்கி வைத்­தி­ருக்­கு­மாறு நாம் அர­சாங்­கத்தை மீண்டும் மீண்டும் கேட்ட வண்­ணமே உள்ளோம். ஆயினும் வட­பு­லத்தில் இரா­ணு­வத்­தி­னரின் பிர­சன்­னத்தைக் குறைத்­திட அர­சாங்கம் விரும்­பு­கின்­ற­தே­யில்லை எனவும் குறிப்­பிட்டார்.

வட­மா­கா­ணத்தில் வாகனப் பரி­சோ­த­னைகள் உள்­ளிட்ட பெருந்­தி­ர­ளான நட­வ­டிக்­கைகள் மூலம் இரா­ணுவம் பாது­காப்பை பலப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக அறிய வரு­கின்­றது. இது குறித்து யாழ்ப்­பாண பாது­காப்புப் படை­களின் கட்­ட­ளைத்­த­ள­பதி உதய பெரே­ரா­விடம் கேட்­ட­போது அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது,

விடு­தலைப் புலி­களின் அனு­தா­பி­களால் சாத்­தி­ய­மான முறையில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் மீள் அணி­தி­ரட்டல் ஒன்றை தடுப்­பதை இலக்­காகக் கொண்டே மேற்­படி படை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­கவும் இங்­குள்ள இத்­த­கை­யோ­ருக்கு புலம் பெயர்ந்த தமி­ழர்­களின் சில பிரி­வினர் நிதி­யு­தவி அளித்து வரு­வ­தனை தாங்கள் கேள்­வி­யுற்று வரு­வ­தா­கவும், கிளி­நொச்­சியில் பொலிஸ்­காரர் ஒருவர் மீது சந்­தேக நபர் ஒருவர் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யி­ருந்த சம்­ப­வ­மொன்றை அடுத்து அத்­த­கைய சந்­தேக நப­ரொ­ரு­வரை கைது செய்­த­வதில் முன் எச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கையும் தேவை­யென்­பது உண­ரப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.

இலங்­கையில் சுமார் மூன்று தசாப்த கால­மாக இடம்­பெற்று வந்த கொடிய யுத்­தத்தின் போது தோற்­க­டிக்­கப்­பட்ட தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்­புக்கு புத்­து­யி­ர­ளிப்­பதில் சந்­தேக நப­ரான கோபியும் அவ­ரது சக­பா­டி­யான அப்பன் என்­ப­வரும் புலம் பெயர் தமிழர் அமைப்­பி­ன­ருடன் தொடர்­பு­களைப் பேணி வந்­துள்­ளதை இரா­ணுவம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இத்தகைய மீள் அணி திரட்டும் நடவடிக்கைக்கு பரந்துபட்ட ஆதரவு இல்லாதிருப்பினும் இத்தகைய சக்திகள் வடபுலத்தில் உள்ள பலவீனப்பட்டுள்ள சமூகங்களை சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடலாமெனவும் அதனை எம்மால் அனுமதிக்க முடியாதெனவும் ????????? மேலும் தெரிவித்தார்.
இரா­ணு­வத்­தி­னரின் அதி­க­ரித்த பிர­சன்­னத்தை நியா­யப்­ப­டுத்த விடு­தலைப்புலிகள் பற்றிய புரளியை கிளப்பிவிட்டுள்ளது அரசு. .விக்­கி­னேஸ்­வரன். Reviewed by NEWMANNAR on March 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.