தலைமன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் 19 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுப்பட்ட போதே 4 படகுகளுடன் தமிழக மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டுள்ள தமீழக மீனவர்கள் மீதான சட்டநடவடிக்கைகள் மேற்கொள்வதாக, கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்ககைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடற்றொழில் தினைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
தலைமன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் 19 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment