அண்மைய செய்திகள்

recent
-

நேற்று தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 21 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்களை நேற்று(19) புதன் கிழமை இரவு 7.30 மணியளவில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளில் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இவர்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-பின் இவர்கள் இன்று வியாழக்கிழமை காலை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரனைகள் மேற்கொள்ளப்பட்ட பின் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

-மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் குறித்த 21 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் முழுமையான வாக்கு மூலம் பதிவு செய்த பின் இவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்று தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து 21 இந்திய மீனவர்கள் கைது Reviewed by NEWMANNAR on March 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.