வடக்கு கிழக்கு சிறுவர் சிறுமியரில் பலருக்கு கண்களில் உபாதை?
வடக்கு கிழக்கைச் சேர்ந்த சிறுவர் சிறுமியரில் பலருக்கு கண்களில் உபாதை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல சிறுவர் சிறுமியர் கண் தொடர்பான நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனவே குறித்த இரண்டு மாகாணங்களினதும் வைத்தியசாலைகளுக்கு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுகப்பட்டு வருவதகாத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவ மாணவியர் கண் நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாகாணங்களின் வைத்தியசாலைகளது வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு சிறுவர் சிறுமியரில் பலருக்கு கண்களில் உபாதை?
Reviewed by NEWMANNAR
on
March 31, 2014
Rating:

No comments:
Post a Comment