அண்மைய செய்திகள்

recent
-

முசலி பிரதேசத்தில் தற்போது காணி பயன்பாட்டு திட்டம் தயாரித்தல் நடவடிக்கை-படங்கள்


மன்னார் மாவட்டத்தில் தற்போது காணி பயன்பாட்டு திட்டம் தயாரிக்கும் நடவடிக்கை மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் 5 பிரதேச செயலாளர் பிரிவிலும் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் கடந்த ஒரு வாரகாலமாக முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்டபட்ட 20 கிராம சேவகர் பிரிவிலும் முசலி பிரதேச செயலகத்தல் பணியாற்றும் காணி பயன்பாட்டு உத்தியோகத்தர் சித்திரா தலைமையிலான குழுவினர் தற்போது கிராம சேவகர் பிரிவிற்கு சென்று காணி பயன்பாட்டு  திட்டத்தின் நோக்கம் பற்றி சில தகல்களையும் மக்களுக்கு வழங்கி   தங்களின் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தற்போது 6-8 வரையிலான கிராம சேவகர் பிரிவின் நடவடிக்கை நிறைவடைந்துள்ளாதாக குழுவினர் தெரிவித்தனர்.
இக் குழுவினர் இன்று பூநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு சென்று தங்களின் கள ஆய்வில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு துணையாக கிராம உத்தியோகத்தர் றவ்பு .சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச.எம்.வாஜித் மற்றும் பொருளாதார உத்தியோகத்தர் ஆகியோரின் வழிகாட்டலில் தங்களின் கடமையினை சிறந்த முறையில் மேற்கொண்டோம் என அவர்கள் தெரிவித்தனர்.


எஸ்.எச்.எம்.வாஜித்






முசலி பிரதேசத்தில் தற்போது காணி பயன்பாட்டு திட்டம் தயாரித்தல் நடவடிக்கை-படங்கள் Reviewed by NEWMANNAR on March 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.