அண்மைய செய்திகள்

  
-

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதச விசாரணை நடாத்துமாறு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்ளக ரீதியான நல்லிணக்க முனைப்புக்களையே முன்னெடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.


சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


தீர்மானத்தை நிராகரிப்பதாகவும், தீர்மானம் நல்லிணக்க முனைப்புக்களை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தினால் தளர்ந்து விடப் போவதில்லை எனவும், தொடர்ந்தும் நல்லிணக்க முனைப்புக்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது – ஜனாதிபதி Reviewed by NEWMANNAR on March 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.