தலைமன்னார்கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேருக்கு விளக்கமறியல்
தலைமன்னார் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேரையும்; எதிர்வரும் 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி மீனவர்கள் 19 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தியபோதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்தியா, தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த மேற்படி மீனவர்கள் 19 பேரையும் 05 படகுகளுடன் புதன்கிழமை இரவு கடற்படையினர் கைதுசெய்தனர்.
தலைமன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வியாழக்கிழமை மீனவர்கள் 19 பேரும் வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மன்னார் மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, தலைமன்னார் பொலிஸாரிடம் மீனவர்கள் 19 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.
இதேவேளை, கடந்த 19ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் 05 படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 21 பேரும் எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
தலைமன்னார்கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 19 பேருக்கு விளக்கமறியல்
Reviewed by NEWMANNAR
on
March 28, 2014
Rating:
(1).jpg)
No comments:
Post a Comment