அண்மைய செய்திகள்

recent
-

யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் 14 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை யாழ். சிறுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் நேற்று மாலை ஆஜர்படுத்தியதை அடுத்து, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சிறுமியின் நெருங்கிய உறவினர் ஒருவரால் அவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரால், சிறுமி பல தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது
யாழில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் விளக்கமறியலில் Reviewed by NEWMANNAR on March 31, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.