மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் 25வது வருடபூர்த்தியை ஒட்டி மூத்த உறுப்பினர் கௌரவிப்பு- Photo
மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் பொதுகூட்டமும் 25வது வருட நிறைவை ஒட்டி வெள்ளிவிழா மலர் வெளியீடும் கடந்த சனிக்கிழமை (15.03.2014) மன்னார் மாவட்ட செயலகத்தில் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்லி டி மெல் வைபவரீதியாக வெள்ளிவிழா நூலினை வெளியிட்டு வைத்தார்
இதேவேளை ஓய்வுதியம்பெறுவோர்களில் மூத்த உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. இதன் போது மூத்த உறுப்பினர்களை அதிதிகள் மாலை அணிவித்து கௌரவித்ததுடன் பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்
இதன்போது உதவி மாவட்ட செயலாளர் எம்.பரமதாசன் , நானாட்டான் பிரதேசசெயலாளர் சந்திரையா மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்து
கொண்டனர்
மன்னார் மாவட்ட ஓய்வூதியம் பெறுவோர் சங்கத்தின் 25வது வருடபூர்த்தியை ஒட்டி மூத்த உறுப்பினர் கௌரவிப்பு- Photo
Reviewed by Author
on
March 18, 2014
Rating:

No comments:
Post a Comment