மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும்: இலங்கை மின்சார சபை
நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் குறைந்துள்ளமையால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டில் மாலை 06 மணித்தொடக்கம் இரவு 09 மணிவரையிலான காலப்பகுதியிலேயே மக்கள் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்துவதால் இந்த மூன்று மணித்தியாலங்களுக்கு முடிந்தவரை பாவனையை குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இருப்பினும் மின் வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சார சபையின் பொது முகாமையாளர் செனுஜித் தசநாயக்க தெரிவித்தார்.
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தவும்: இலங்கை மின்சார சபை
Reviewed by NEWMANNAR
on
April 02, 2014
Rating:

No comments:
Post a Comment