மன்/புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு-2014 -படங்கள்
மன்/புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தில் புதிய மாணவர் தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வும் பழைய மாணவர் தலைவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் 24-03-2014 அன்று காலை 8.00 மணிக்கு கல்லூரி முதல்வர் அருட்சகோதரர்.ளு சந்தியாகு(F.S,E) தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வினைச் சிறப்பிக்குமுகமாக பிரதம விருந்தினர் அருட்சகோதரர்.யு மேர்வின் லெம்பேட்(F.S.E) உதவி இயக்குனர் லசாலியன் கல்விவளாகம் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக அருட்பணி ளு.ஜெயபாலன்(பங்குத்தந்தை வங்காலை) அவர்களும் அருட்சகோதரி. எலிசபெத் திருக்குடும்ப கன்னியர் மடத்தலைவி வங்காலை அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
2014/2015 ம் கல்வியாண்டின் புதிய பிரதம மாணவத்தலைவனாக செல்வன் செபஸ்ரியன் வெளினன் மார்க் என்பவரும் பிரதி பிரதம மாணவத்தலைவிகளாக செல்வி கில்பட் ரெம்சியா லெம்பேட் என்பவரும் செல்வி டேவிற் டிசாந்தினி சேசை என்பவரும் தெரிவுசெய்யப்பட்டு சத்திய பிரமாணம் செய்து கொண்டதுடன் பழைய மாணவத்தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வினை உப அதிபர் திரு யு.து.து. ஆனந்தம் குரூஸ் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மாணவர்த்தலைவர்களின் பொறுப்பாசிரியர் திரு.து. ஒகஸ்ரின் செல்வி டு. புஸ்பராணி லெம்பேட் ஆகியோரின் வழிநடத்தலில் சிறப்பாக ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தனர்.
மன்/புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் தலைவர்களுக்கான சின்னஞ் சூட்டும் நிகழ்வு-2014 -படங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 01, 2014
Rating:

No comments:
Post a Comment