இந்திய மீனவர்கள் இருவர் கரையொதுங்கினர்
யாழ். காரைநகர், சாம்பலோடை கடற்கரையில் படகொன்றில் இந்திய மீனவர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை (01) அதிகாலை கரையொதுங்கியதாக காரைநகர் கடற்படையினர் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டின் கல்லாறு பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஒருவரும் 13 வயதுச் சிறுவன் ஒருவனுமே கரையொதுங்கினர்.
திங்கட்கிழமை (31) மாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்கு வந்த இவர்களின் வலைகளை ரோலர் படகுகள் அறுத்ததன.
இதனால், தங்களது வலைகளை இவர்கள் தேடித்திரிந்த நிலையில் படகில் எரிபொருள் தீர்ந்தது. இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் இவர்கள் கரையொதுங்கியதாகவும் கடற்படையினர் கூறினர்
இவர்களிடம் தற்போது விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன.
இதனைத் தொடர்ந்து ஊர்காவற்றுறைப் பொலிஸாரிடம் இவர்களை ஒப்படைக்கவுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்திய மீனவர்கள் இருவர் கரையொதுங்கினர்
Reviewed by NEWMANNAR
on
April 01, 2014
Rating:

No comments:
Post a Comment