அண்மைய செய்திகள்

recent
-

சிரியாவில் படுகொலையாளியை சுட்டுக் கொன்று சிலுவையில் அறைந்த போராளிகள் : அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு- படங்கள்

வட சிரிய நகரான ரக்காவில் களவாடும் நோக்கத்தில் ஒருவரை படுகொலை செய்த நபரொருவர் பிராந்திய போராளிகளால் கண்கள் கட்டப்பட்டு தலையில் சுடப்பட்டு சிலுவையில் அறையப்படுவதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியானதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அந்தப் புகைப்படங்கள் சம்பவத்தை நேரில் கண்ட பொது மக்களால் கையடக்கத் தொலைபேசி புகைப்படக் கருவிகளை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தன. 

ஐ.எஸ்.ஐ.எஸ் போராளி குடுவைச் சேர்ந்த போராளிகள் களவாடும் நோக்கில் முஸ்லிம் ஒருவரை படுகொலை செய்த குறிப்பிட்ட நபரை மடக்கிப் பிடித்து அடித்து உதைத்த பின்னர் நூற்றுக்கணக்கான மக்கள் முன்னிலையில் அவரது கண்களை கட்டி அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

தொடர்ந்து திருடனின் சடலத்தை ஊர்வலாக எடுத்துச் சென்ற போராளிகள் அதனை நகர சதுக்கத்தில் சிலுவையில் அறைந்துள்ளனர். 

அந்நபர் எதனை திருடினார் என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. 





சிரியாவில் படுகொலையாளியை சுட்டுக் கொன்று சிலுவையில் அறைந்த போராளிகள் : அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு- படங்கள் Reviewed by NEWMANNAR on April 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.