மோசடியான முறையில் பிரித்தானிய வீசாவை பெற முயன்ற தம்பதி கைது
மோசடி செய்து பிரித்தானிய வீசாவை பெற முயற்சித்த கணவன், மனைவியை கொழும்பு மோசடி தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பிரித்தானிய வீசாவை பெறுவதற்கான கடவுச்சீட்டில் உத்தியோகபூர்வமற்ற வகையில் மாற்றங்களை செய்தும் முறைகேடான முறையில் வீசாவுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர்.

அத்துடன் பிரித்தானியாவுக்கு பயணம் செய்ய 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர்கள் இலங்கை அதிகாரிகளின் விசாரணைகளையும் எதிர்நோக்கியுள்ளனர்.
பிரித்தானியாவின் வீசா விதிமுறைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என பிரித்தானிய தூதரகத்தின் வீசா மற்றும் குடிவரவு நடவடிக்கை முகாமையாளர் டொனி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
போலியான ஆவணங்களையோ, மோசடியான ஆவணங்களையோ சமர்ப்பிக்க வேண்டாம் என வீசா விண்ணப்பதாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மோசடியான முறையில் பிரித்தானிய வீசாவை பெற முயன்ற தம்பதி கைது
Reviewed by NEWMANNAR
on
July 25, 2014
Rating:

No comments:
Post a Comment