அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஊடகவியலாளருக்கான கொலை மிரட்டல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பத்திரிக்கையாளரொருவருக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பில் மன்னார் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதிக்கு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் ஒத்திவைத்துள்ளார். 

மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரான ஏ.எஸ்.முஹம்மது பஸ்மி என்பவரை அவரது பத்திரிக்கை தொழிலை கைவிட வேண்டும்.அல்லது கொல்லப்படுவார் என கொலை அச்சுறுத்தல் கடிதம் ஒன்று கடந்த வருடம் தபால் மூலம் அவருடைய வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் ஊடகவியலாளர் முஹம்மது பஸ்மி தமக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதையடுத்து மன்னார் பொலிஸார் மன்னார் மாவட்ட நீதிமன்றில் குறித்த கொலை மிரட்டல் தொடர்பான வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தனர். 

 இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை குறித்த வழக்கு மன்னார் நீதிமன்றில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் விசாரனைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி எஸ்.பிறிமூஸ் சிராய்வா குறித்த வழக்கினை ஒத்திவைக்குமாறு விண்ணப்பம் செய்ததையடுத்து மேற்படி வழக்கினை மன்னார் நீதவான் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
மன்னார் ஊடகவியலாளருக்கான கொலை மிரட்டல் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு Reviewed by NEWMANNAR on July 24, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.