அண்மைய செய்திகள்

recent
-

போரினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை பாப்பரசர் சந்­திக்கக் கூடும் - மன்னார் ஆயர்

இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்ள போப் பிரான்சிஸ், போரினால் பாதிக்­கப்­பட்ட வட­ப­குதி மக்­களைச் சந்­திக்க வேண்டும் என்று கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­கான ஒரு கோரிக்கை வட–­கி­ழக்கு தமிழ் சிவில் சமூக அமைப்பால் பாப்பரசரிடம் வைக்­கப்­பட்­டுள்­ளதை, மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உறு­திப்­ப­டுத்­தினார். 

 பாப்பரசர் பிரான்­சிஸின் பய­ணத்தின் போது, மடு­மாதா தேவா­ல­யத்தில் காலஞ்­சென்ற ஒரு கத்­தோ­லிக்க பாதி­ரி­யாரைப் புனி­த­ராக அறி­விக்கும் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும்,போரினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை சந்­திக்க வேண்டும், இவை இரண்டும் இல்­லை­யென்றால், அவ­ரது வரு­கை­யா­னது காலத்­துக்கு முதிர்ச்சி அடை­யா­த­தா­கத்தான் இருக்கும் எனவும் ஆயர் ராயப்பு ஜோசப் தெரி­வித்தார். பாப்பரசர் பிரான்சிஸ் தமது வேண்­டு­கோளை ஏற்றுக் கொள்வார் என்று தாங்கள் நம்­பு­வ­தாகக் கூறும், மன்னார் ஆயர், தமது கோரிக்கை அவ­ரது பிர­தி­நிதி மூலம் ரோமுக்கு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது என்றும் கூறினார். 

 அவர் மேலும் கூறுகையில், 

 மன்னார் மாவட்டம் மடுப் பகு­தியில் போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை போப் சந்­திப்­ப­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படும். போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார் பில், இறை­வ­னிடம் அவர்­களின் விடு­த­லைக்­காக, மகிழ்ச்­சிக்­காக, சுதந்­தி­ரத்­துக்­காக மக் ­க­ளுடன் சேர்ந்து அவர் அங்கு ஜெபிக்க வேண்டும் என்று தமது தரப்பில் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டுள்­ள­து. பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்­காவும், அவர்­க­ளது உரி­மை­க­ளுக்­கா­க­வுமே, நீதி­யையும் உண்­மை­யையும் அடிப்­ப­டை­யாகக் கொண்டே அந்தக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­து. 

 அடுத்த ஆண்டு ஜன­வரி மாதம் 13 ஆம் திகதி இலங்கை வரும் பாப்பரசர் பிரான்சிஸ், கொழும்பு மற்றும் மன்னார் பகு­தியில் திருப்­பலி மற்றும் ஜெபக் கூட்­டங்­களில் கலந்துகொண்ட பிறகு, 15 ஆம் திகதி காலை பிலிப்பைன்ஸ் செல்கிறார்.
போரினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களை பாப்பரசர் சந்­திக்கக் கூடும் - மன்னார் ஆயர் Reviewed by NEWMANNAR on July 17, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.