குடும்பத் தகராறில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் படுகாயம்
அக்கரைப்பற்று – வெள்ள பாதுகாப்பு வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு 9.15 அளவில் இடம்பெற்ற மோதலின் போது, இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறினால் இந்த மோதல் ஏற்பட்டிருக்கலாம் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
குடும்பத் தகராறில் துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் படுகாயம்
Reviewed by NEWMANNAR
on
July 31, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment