தபால் கட்டணங்களில் திருத்தம்
அடுத்த மாதம் முதலாம் திகதி தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
தபால் கட்டணத் திருத்தம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்படுவதாக தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
ஆறு வருடங்களுக்கு பின்னர் இம்முறை தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை தபால் கட்டணங்கள் திருத்தப்பட வேண்டிய போதிலும் கடந்த ஆறு வருடங்களாக கட்டணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என தபால் மாஅதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்டணத் திருத்தம் தொடர்பில் அனைத்து தரப்பினரதும் அனுமதிப் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தபால் கட்டணங்களில் திருத்தம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2014
Rating:

No comments:
Post a Comment