அண்மைய செய்திகள்

recent
-

உள­வியல் தொடர்­பான நெருக்­கீ­டுகள் வட பகு­தியில் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளன; சி.துரை­ரட்ணம்

உள­வியல் தொடர்­பான நெருக்­கீ­டுகள் வட பகு­தியில் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளன. எனவே சமூக உள­மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி நல்­வ­ழிப்­ப­டுத்த தமிழர் பாரம்­ப­ரிய மருத்­து­வ­மான சித்த மருத்­து­வத்தில் கூறப்­ப­டு­கின்ற விசே­ட­மான வழி­மு­றை­க­ளி­னூ­டாக புதிய திட்­டங்­களை மாகாண சுதேச மருத்­துவத் திணைக்­களம் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது என வட­மா­காண சுதேச மருத்­துவத் திணைக்­கள ஆணை­யாளர் வைத்­தியர் திரு­மதி. சி.துரை­ரட்ணம் தெரி­வித்தார். இவ்­வி­டயம் தொடர்­பாக அவர் வெளி­யிட்­டுள்ள செய்திக் குறிப்­பி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

அச் செய்திக் குறிப்பில், நவீ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட நாக­ரீக வாழ்க்­கை­யி­னாலும் பல்­வே­று­பட்ட குடும்பச் சூழ்­நிலை, போர­னர்த்தம் போன்­ற­வற்­றி­னாலும் வட­ப­குதி மக்கள் தற்­போது பல்­வே­று­பட்ட நெருக்­க­டி­களை சந்­திக்க வேண்­டிய கட்­ட­ாயத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். இதனால் உள­வியல் தொடர்­பான நெருக்­கீ­டுகள் வட­ப­கு­தியில் சடு­தி­யாக அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றன. வட­ப­குதி தமி­ழர்­களின் பாரம்­ப­ரியம், கலை, கலா­சாரம் என்­பது உலகத் தமி­ழர்­களால் மட்­டு­மன்றி ஏனைய சமூ­கத்­த­வர்­க­ளாலும் விரும்­பப்­பட்­ட­துடன் பாராட்­டப்­பட்ட ஒன்­றா­கவும் இருந்து வந்­தது. 

இன்­றைய நவீ­னத்­துவ மாற்­றங்கள் முக்­கி­ய­மாக போருக்குப் பின்­ன­ரான எமது இளம் சமு­தா­யத்­தி­ன­ரி­டையே ஏற்­பட்டு வரும் மாற்­றங்கள் அதிர்ச்­சி­யூட்டும் வித­மாக காணப்­ப­டு­கின்­றன. 

இள வய­தி­ன­ரி­டையே அதி­க­ரித்து வரும் புகை­போதைப் பழக்­கங்கள், இள­வ­யதுக் கர்ப்­பங்கள், தற்­கொ­லைகள், வன்­மு­றைப்­போக்­குகள், ஆசி­ரியர், பெற்­றோரை மதிக்­காத அலட்­சிய மனப்­பாங்­குகள் என்­பன சமூ­கத்தில் மிக மோச­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ளன. இவ்­வா­றான விரும்­பத்­த­காத மாற்­றங்கள் தொடர்பில் அரச, அர­ச சார்­பற்ற, சமூக அக்­க­றைசார் நிறு­வ­னங்கள் உட­ன­டி­யாக கவனம் செலுத்தி அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்­டி­யது காலத்தின் கட்­டா­ய­மாகும். இவ்­வா­றான இளம் சமு­தா­யத்தின் மாறு­பட்ட உள­மாற்­றங்­களை சீர்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை எனில், எமது சமூ­கத்தின் பாரம்­ப­ரியம், கலா­சாரம் அழி­வ­துடன் எமது எதிர்­கால சந்­த­தியும் மிக மோச­மான விளை­வு­களை எதிர்­கொள்­வதும் தவிர்க்­க­மு­டி­யா­­தொன்­றா­கி­விடும். 

எனவே சமூக உள மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி நல்­வ­ழிப்­ப­டுத்த தமிழர் பாரம்­ப­ரிய மருத்­து­வ­மான சித்த மருத்­து­வத்தில் கூறப்­ப­டு­கின்ற விசே­ட­மான வழி­மு­றை­க­ளி­னூ­டாக புதிய திட்­டங்­களை மாகாண சுதேச மருத்­துவ திணைக்­களம் நடை­மு­றைப்­ப­டுத்த ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இத் திட்டம் தொடர்பில் சமூக மட்­டங்­களில் திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக ஆயுள்­வேத மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான கலந்­து­ரை­யாடல் ஒன்று மாகாண ஆணை­யாளர் சுதேச மருத்­து­வ­த்து­றையின் தலை­மையில் கடந்த ௪ஆம் திகதி மாகாண சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது.

 இதன் தொடர்ச்­சி­யாக உள­வி­யல்சார் நிபு­ணத்­துவம் பெற்­ற­வர்கள் மூல­மாக அறி­வூட்டல் பயிற்­சி­யூ­டாக நீண்­ட­கால நோக்­கி­லான திட்­ட­வ­ரை­பொன்றை தயா­ரித்தல் தொடர்­பி­லான கருத்­த­மர்வு ஜூன் மாத இறு­தியில் நடத்­தப்­பட்­டது. இத் திட்ட வரைபின் மூலம் பாட­சா­லை­மட்ட மாண­வர்கள், அரச உத்­தி­யோ­கத்­தர்கள், முதி­யோர்கள் தொடர்­பி­லான உள­நெ­ருக்­கீட்டுப் பிரச்­சி­னை­களை இனம் காணலும் தீர்த்­தலும் மற்றும் யோகா­சனப் பயிற்சி நெறி­களை முன்­னெ­டுத்தல் தொடர்­பான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இத் திட்­டங்­க­ளுக்கு அரச, அர­ச சார்­பற்ற நிறு­வ­னங்கள் ஒத்­து­ழைப்­பையும் ஆத­ர­வையும் வழங்கி இதனை முன்­னெ­டுத்­துச்­செல்ல உத­வு­மாறு கேட்­டுக்­கொள்­கின்றோம் என்­றுள்­ளது.
உள­வியல் தொடர்­பான நெருக்­கீ­டுகள் வட பகு­தியில் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்­ளன; சி.துரை­ரட்ணம் Reviewed by NEWMANNAR on July 26, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.