3 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்ககற்கள் கொள்ளை
மாணிக்கல் வாங்கும் தோரணையில், மஹரகமையில் உள்ள மாணிக்கக்கல் வியாபாரியை ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, பொலிஸ் அடையாள அட்டையினை காண்பித்து, மூன்று கோடி ரூபாய் பெறுமதியான 6 மாணிக்கக்கற்களை கொள்ளையிட்டு சென்ற, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட இருவரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
மாணிக்கக்கல் வியாபாரியை ஹோட்டலுக்கு வரவழைத்து, மாணிக்கக்கற்களை பரிசோதிப்பதற்காக அங்குள்ள அறையொன்றினுள் கூட்டிச்சென்று, குளியலறையில் வைத்து பொலிஸ் அடையாள அட்டையை காட்டி மாணிக்கக்கற்களை, முன்னாள் பொலிஸ் அதிகாரி கொள்ளையிட்டு சென்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பொலிஸ் குற்றதடுப்பபு பிரிவிலிருந்து கடந்த 2012 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட கான்ஸ்டபிள் என பொலிஸார் கூறினர்.
3 கோடி ரூபா மதிப்புள்ள மாணிக்ககற்கள் கொள்ளை
Reviewed by NEWMANNAR
on
August 14, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment