மன்னாரில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்தவருக்கு அபராதம்!
கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவர் மன்னார் சிலாவத்துறை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரவு நேர ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நடத்திய திடீர் சோதனையின்போது இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இளைஞன் சிலாவத்துறை பொலிஸாரால் நேற்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
கட்டடத் தொழிலாளியான இந்த இளைஞன் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், தொழில் நிமித்தம் சிலாவத்துறை பகுதியில் தங்கியிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 15,000 ரூபா சொந்தப் பிணையில் செல்வதற்கு இளைஞனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மன்னாரில் கையடக்கத் தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்தவருக்கு அபராதம்!
Reviewed by NEWMANNAR
on
August 14, 2014
Rating:

No comments:
Post a Comment