அண்மைய செய்திகள்

recent
-

களவாடப்பட்ட வாள்கள் கண்டி இராச்சியத்துக்குரியது

ஹட்டன் பகுதியில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்ததாக நம்பப்படும் புரதான வாளுடன் மூவர் பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர் இந்நிலையில் குறித்த வாள் பல வருடங்கள் பழைமை வாய்ந்த கண்டி இராச்சியத்திற்குரியது என தொல்பொருள்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 குறித்த வாளை விற்பனை செய்ய முயன்ற 3 சந்தேக நபர்கள் கடந்த 07.08.2014 அன்று இரவு அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 08.08.2014 அன்று அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சந்தேக நபர்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மேற்படி வாளை பற்றி விசாரணைகளை நடத்தி அட்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் தொல்பொருள்துறை திணைக்களத்திற்கு அட்டன் நீதிமன்றத்தின் நீதிவான் அமில ஆரியசேன உத்தரவிட்டமை குறிப்பிடதக்கது. 

 அந்தவகையில் தொல்பொருள்துறை திணைக்களம் குறித்த வாளை பற்றி ஆராய்ச்சி செய்து இந்த வாள் பல வருடத்திற்கு பழைமை வாய்ந்த கண்டி இராச்சியத்திற்குரியது என அறிவித்துள்ளது. மஸ்கெலியா பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு வீடு ஒன்றில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாக நம்பப்படும் வாள் வெள்ளி மற்றும் பித்தளை போன்ற உலோகங்களால் செய்யப்பட்டுள்ளது. குறித்த வாளை 36 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்படுகையில் சந்தேக நபர்கள் மூவரும் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


களவாடப்பட்ட வாள்கள் கண்டி இராச்சியத்துக்குரியது Reviewed by NEWMANNAR on August 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.