திவிநெகும தேசிய திட்டத்தின் கீழ் முசலி-அகத்தி முறிப்பு கிராமத்தில் பல வேலை திட்டம் ஆரம்பம்.-Photo
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட அகத்தி முறிப்பு கிராம சேவகர் பிரிவில் உள்ள அலக்கட்டு கிராமத்தில் தற்போது மக்கள் மீள் குடியேறி வருகின்றார்கள்.
அந்த வகையில் மக்களின் மிகவும் முக்கியமான பிரச்சினையாக காணப்பட்ட பாதை மற்றும் மின்சார தேவைகளை நிறைவு செய்யும் முகமாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சருமான றிசாட் பதியுதினின் பணிப்புரையின் பேரில் முசலி பிரதேச சபை தவிசாளர் எம்.எஹியான் அவர்களினால் நேற்று(29) ஆரம்பித்துவைக்கப்பட்டன. தற்போது குறித்த கிராமத்திற்கான பாதைகள் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தொடர்ச்சியாக ஏனைய வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படும் என முசலி பிரதேச சபை தவிசாளர் எம்.எஹியான் தெரிவித்தார்.
இன் நிகழ்வில் அகத்தி முறிப்பு கிராமத்தின் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் கிராம அபிவிருத்தி உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
திவிநெகும தேசிய திட்டத்தின் கீழ் முசலி-அகத்தி முறிப்பு கிராமத்தில் பல வேலை திட்டம் ஆரம்பம்.-Photo
Reviewed by NEWMANNAR
on
August 30, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment