கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களும் மடு சுற்றுலா நீதிமன்றத்தில் வைத்து விடுதலை
இலங்கை கடல் எல்லையினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடந்த மாதம் 22 ஆம் திகதி(22-07-2014) கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் மடுவில் வைத்து வெள்ளிக்கிழமை விடுதலை செய்தார்.

இதன் போது குறித்த மீனவர்களை விளக்க மறியலில் வைக்க மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டார்.குறித்த மீனவர்கள் தொடர்ந்து மூன்று தடவைகள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
-இந்த நிலையில் குறித்த மீனவர்களின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து பரிந்துரை விடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவின் சுதந்திரதினமான நேற்று (15) குறித்த 20 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
குறித்த 20 இந்திய மீனவர்களும் நேற்று வெள்ளிக்கிழமை மடு சுற்றுலா நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களை கடற்படையூடாக இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த மீனவர்கள் சார்பாக சட்டத்தரணி ரி.வினோதன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களும் மடு சுற்றுலா நீதிமன்றத்தில் வைத்து விடுதலை
Reviewed by NEWMANNAR
on
August 16, 2014
Rating:

No comments:
Post a Comment