அண்மைய செய்திகள்

recent
-

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குளறுபடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் வெளியிடும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வி அமைச்சரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

 இதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார். 

 உயர்தர பொருளியல் வினாத்தாள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார். 

 இதேவேளை, அமைச்சில் காணப்படும் பல்வேறு குளறுபடிகளை மூடிமறைப்பதற்கு இவ்வாறான முயற்சிகளில் கல்வி அமைச்சர் ஈடுபடுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் குளறுபடி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on August 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.