முசலித் தேசிய பாடசாலைச் சந்தியில் மீளவும் நிழற்குடை அமைக்கப்படுமா?
மன்னார் சிலாவத்துறை வீதியில் அமைந்துள்ள முசலி தேசிய பாடசாலைச் சந்தியில் 1990 வரையில் அழகான பஸ்தரிப்பு நிலையம்(நிழற்குடை)அமைந்திருந்தது.
அங்கு ஏற்பட்ட யுத்தத்தின் காரணமாக அது முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.2002ன் பின்னர் முஸ்லிம்கள் படிப்படியாக மீளக்குடியேறியுள்ளனர்.ஆனால் இதுவரை அச்சந்தியில் பஸ்தரிப்பு நிலையம் மீளவும் அமைக்கப்படவில்லை.இது தொடர்பான செய்தி ஊடகங்களில் பலமுறை வெளியாகியும் இவ்விடயத்தில் யாரும் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை. மழைக்காலம் தொடரவுள்ளது இதனால் முசலி;க்கிராம மக்கள்,கூளாங்குள கிராமமக்கள் வாரிவெளி மக்கள்,முசலித் தேசிய பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,ஏனைய அரச ஊழியர்கள் போன்ற அனைவரும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை உள்ளது.
ஆகவே.இவ்விடயம் தொடர்பில் முசலிப் பிரதேச சபைத்தவிசாளர் தேசமான்ய அ.வ.எஹியான்,வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் போன்றோர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மேலும் இப்பிரதேசத்தில் செயற்படும் டயலொக்,மொபிடெல் போன்ற நிறுவனங்களும் தமது சமுக சேவைப்பிரிவினூடாக இதனைச் செய்து முடிக்கலாம்.
முசலித் தேசிய பாடசாலைச் சந்தியில் மீளவும் நிழற்குடை அமைக்கப்படுமா?
Reviewed by NEWMANNAR
on
August 26, 2014
Rating:

No comments:
Post a Comment