சிறுநாவற்குள பிள்ளையார் கோயில் உடைப்பு சம்பவத்தில் கோயிலுக்கான மீள்நிர்மாண பணிக்கான அனுமதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது
சிறுநாவற்குளம் பிள்ளையார் கோயில் உடைப்பு சம்பவமானது 09.02.2014 அன்று இடம்பெற்றது அன்றைய தினமே சந்தேக நபர்கள் கைது செய்யபப்பட்டு 10.02.2014 அன்று மன்னார் மாவட்ட நீதிவான் நிதிமன்றத்தில் அஜர்படுத்;தப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதவான் சந்தேக நபர்கள் இருவரையும் மூன்று(03) நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். பின்னர் 12.02.2014 அன்று சந்தேக நபர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது. 26.05.2014 அன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் தனது காணிக்குள் கோயில் உள்ள என கூறியபோது நீதவானால் எதிர்வரும் தவணையில் காணிக்கான அனுமதிப் பத்திரத்தினை பொலிஸாரிடம் ஒப்படக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.
அதன் பின்னர் இவ்வழக்கானது 09.06.2014 அன்று மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது காணிக்கான அனுமதிப் பத்திரம் சமர்ப்பிக்கபட்டது. இவ் அனுமதிப் பத்திரம் குறித்து சந்தேகம் இருப்பதாக எம் தரப்பு சட்டத்தரணி கூறிய போது இவ்வழக்கானது மீண்டும் 21.07.2014 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேற்படி 26.05.2014, கொழும்பில் சட்டத்தரணி ஜி.ராஜ குலேந்திரா அஜராகி இருந்தார்.
மீண்டும் 21.07.2014 அன்று வழக்கானது மேலதிக விசாரணகளுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது கிராம அலுவலரின் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டன 25.08.2014 ஆகிய இன்று கொழும்பிலிருந்து வருகைதந்த சட்டத்தரணி ஜி.ராஜ குலேந்திரா,அவரின் உதவியாளர் மன்னார் சட்டத்தரணி சி.வினோதரன் ஆகியோர் அஜராகி இருந்தனர் வழக்கை விசாரித்த நீதவான் கோயில் மீள்நிர்மாணத்திற்கான அனுமதியினை வழங்கியிருந்தார். இவ்வழக்கானது 06.10.2014 அன்று மேலதிக விசாரணைகளுக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
தொடர்புடைய செய்தி
சிறுநாவற்குள பிள்ளையார் கோயில் உடைப்பு சம்பவத்தில் கோயிலுக்கான மீள்நிர்மாண பணிக்கான அனுமதி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது
Reviewed by NEWMANNAR
on
August 26, 2014
Rating:

No comments:
Post a Comment