மன்னாரில் திவிநெகும திட்டத்தின் ஆரம்ப விழா-Photo
சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களமாக(திவிநெகும)மாற்றப்பட்டுள்ள நிலையில் அதன் தொடக்க விழா இன்று(26) செவ்வாய்க்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
திவிநெகும திட்டத்தின் மன்னார் மாவட்ட மேலதிக பணிப்பாளர் நாயகமும்,மாவட்ட அரசாங்க அதிபருமான எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஹீனைஸ் பாரூக்,முத்தலிப் பாபா பாரூக், திவிநெகும திட்டத்தின் தலைமை மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆர்.எச்.ஏ.குமார சிறி,வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியூதீன் உற்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களமாக(திவிநெகும) கடந்த ஜனவரி மாதம் 03 ஆம் திகதி மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமூர்த்தி அபிவிருத்தி அதிகார சபை வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களமாக(திவிநெகும) மாற்றப்பட்டுள்ள நிலையில் அதன் தொடக்க விழாவும்,உத்தியோகஸ்தர்கள்,சமூக மட்டத் தலைவர்களுக்கான விழிர்ப்பணர்வு செயலமர்வும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழவில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த வாழ்வின் எழுச்சி உத்தியோகஸ்தர்கள் 258 பேர் மற்றும் பிரதேசச் செயலாளர்கள்,கிராம மட்ட அமைப்புக்கள்,சமூக மட்டத்தலைவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் திவிநெகும திட்டத்தின் ஆரம்ப விழா-Photo
Reviewed by NEWMANNAR
on
August 26, 2014
Rating:
No comments:
Post a Comment