மன்னார் பாலம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் திருட்டு.
மன்னார் பாலம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் புதன் கிழமை இரவு ஆலயத்தின் கூரைவழியாக உள்ளே நுழைந்த திருடர் ஆலய மூலஸ்தானத்தில் இருந்த பொருட்களை களவாடிச் சென்றுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் மடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆலயத்தின் உள்ளே சென்ற திருடர் அம்மன் மூலஸ்தானத்தில் இருந்த அம்மன் இயந்திர தகடு-1,பிள்ளையார் இயந்திரத்தகடு-1,அம்மன் விக்கிரமத்தில் உள்ள சூலம் மற்றும் அரை பவுன் தங்க நகை ஆகியவற்றை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார் .
மேலதிக விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பாலம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் திருட்டு.
Reviewed by NEWMANNAR
on
August 15, 2014
Rating:

No comments:
Post a Comment