வடமகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பு.Photo
பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் எதிர்வரும் ஜனவரி மாதம் 14 ஆம் திகதி மன்னார் மடுவிற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் பாப்பரசரின் வருகையை முன்னிட்டு மடுப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் ஆராயும் நோக்குடன் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர இன்று(14) மாலை மடுத்திருத்தலத்திற்கு வருகை தந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில் மறு நாள் 14 ஆம் திகதி மன்னார் மடுத்திருத்தலத்திற்கு வருகை தரவுள்ளார்.
இந்த நிலையில் பாப்பரசரின் வருகையின் போது மடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் உற்பட சகல விடயங்கள் தொடர்பாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர மன்னார் ஆயருடன் கலந்துரையாடினார்.
இதன் போது வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபருடன் மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சரத்குமார ஜோசப்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த ரூட்ரிகோ,தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் மற்றும் கிளிநொச்சி,முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலின் போது மடுத்திருவிழவிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சகல விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் மடு ஆலயத்திற்குள் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.பின் ஆலய பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நிலமைகளையும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வடமகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பூஜீத ஜெயசுந்தர மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பு.Photo
Reviewed by NEWMANNAR
on
August 15, 2014
Rating:
No comments:
Post a Comment