மருத்துவர் மரணமான அழகு நிலையத்தில் காலாவதியான மருந்துப் பொருட்கள்-படங்கள்
பம்பலப்பிட்டியில் மருத்துவர் ஒருவர் மரணமான அழகு நிலையத்தில் இன்று நடத்தப்பட்ட தேடுதலின்போது பெருந்தொகையான காலாவதி மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடந்த செவ்வாய்க் கிழமையன்று குறித்த அழகு நிலையத்துக்கு தமது இளமையை தக்கவைக்கும் சிகிச்சைக்காக சென்ற பெண் மருத்துவர் ஒருவர், அங்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்தை அடுத்து மரணமானார்.
இதனையடுத்து அழகு நிலையத்தின் உரிமையாளரான மருத்துவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின்பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவின்பேரில் இன்று அரச பகுப்பாய்வு அதிகாரிகள் அழகு நிலையத்தை பரிசோதனை செய்தபோது அங்கு காலாவதியான மருந்துப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மருத்துவர் மரணமான அழகு நிலையத்தில் காலாவதியான மருந்துப் பொருட்கள்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
August 14, 2014
Rating:

No comments:
Post a Comment