வட மாகாண ஊடகவியலாளர்கள் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு கண்டனம்-சி.வி.கே.சிவஞானம்
வட மாகாண ஊடகவியலாளர்கள் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமைக்கு வட மாகாண சபை அமர்வில் இன்று கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
அமர்வில் கருத்து வெளியிட்ட அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வட மாகாண ஊடகவியலாளர்கள் மீது சுமத்தப்பட்ட இந்தக் குற்றச்சாட்டு வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் 13ஆவது அமர்வு வட மாகாண சபை கட்டடத் தொகுதியில் தற்போது நடைபெற்று வருகின்றது.
அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றியபோதே அவைத் தலைவர் இந்தக் கருத்தை வெளியிட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.
கொழும்பில் நடைபெறவிருந்த ஊடக செயலமர்வில் கலந்துகொள்வதற்காகச் சென்ற வட மாகாண ஊடகவியலாளர்கள் மீது போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டமைக்கு இதன்போது வட மாகாண சபையின் அவைத் தலைவர் விசனம் வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட மாகாண ஊடகவியலாளர்கள் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு கண்டனம்-சி.வி.கே.சிவஞானம்
Reviewed by NEWMANNAR
on
August 05, 2014
Rating:

No comments:
Post a Comment