அண்மைய செய்திகள்

recent
-

கேன்சர் சிகிச்சைக்காக மம்தா மீண்டும் ஓய்வு

கேன்சரால் பாதிக்கப்பட்ட மம்தா மோகன்தாஸ் மீண்டும் நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறார்.‘சிவப்பதிகாரம்‘, ‘தடையற தாக்க‘ போன்ற தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்திருப்பவர் மம்தா மோகன்தாஸ். கேன்சர் நோய்க்காக சிகிச்சை பெற்று மீண்டார். 


ஒன்றரை வருட ஓய்வுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார். ஆனால் நோய் மீண்டும் தாக்கியதையடுத்து தொடர் சிகிச்சை மேற்கொண்டார். இதனால் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சமீபத்தில் அவரை சந்தித்த மலையாள பட இயக்குனர் ரஞ்சித் தான் இயக்கும் ‘வர்ஷம்‘ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தார். இதில் மம்மூட்டி ஹீரோ. இயக்குனரின் அழைப்பை தவிர்க்க முடியாமல் நடிக்க ஒப்புக்கொண்டார். 

இதுபற்றி மம்தா மோகன்தாஸ் கூறியது: முழுமையாக குணம் அடையும் வரை நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் இயக்குனர் ரஞ்சித் தனது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க கேட்டார். இந்த கதாபாத்திரத்துக்கு அதிகம் பேச வேண்டியதில்லை, யதார்த்தமான கதை என்பதால் ஏற்றுக்கொண்டேன். ஹீரோ மம்மூட்டியும் எனது கேரக்டரில் குறுக்கிட மாட்டார். எனவே நடிக்க ஒப்புக் கொண்டேன். 

ஆனால் இது எனது ரீஎன்ட்ரி படம் இல்லை. இன்னும் சிகிச்சையை தொடர வேண்டி இருப்பதால் மீண்டும் ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். இன்னும் சில காலம் கழித்தே ரீ என்ட்ரி ஆவேன். இவ்வாறு மம்தா மோகன்தாஸ் கூறினார்.
கேன்சர் சிகிச்சைக்காக மம்தா மீண்டும் ஓய்வு Reviewed by NEWMANNAR on September 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.