தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து மேலும் 30 இந்திய மீனவர்கள் கைது.Photo
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட மேலும் 30 இந்திய மீனவர்களை இன்று(11) வியாழக்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் வி.ஸ்.மெராண்டா தெரிவித்தார்.
06 படகுகளில் வருகை தந்து மீன் பிடியில் ஈடுபட்ட 30 மீனவர்களே இன்று(11) அதிகாலை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் விசாரணைக்காக தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் குறித்த 30 மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் வி.ஸ்.மெராண்டா மேலும் தெரிவித்தார்.
இதே வேளை கடந்த திங்கட்கிழமை இரவு தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஒரு சிறுவன் உட்பட 06 இந்திய மீனவர்களும் நேற்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த 6 மீனவர்களையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து மேலும் 30 இந்திய மீனவர்கள் கைது.Photo
Reviewed by NEWMANNAR
on
September 11, 2014
Rating:

No comments:
Post a Comment