முறிகண்டியில் பஸ் மிதிப் பலகையிலிருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் இன்று முற்பகல் 11.45 அளவில் தனியார் பஸ்சின் மிதிப் பலகையில் இருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த பஸ்சில் பயணித்த 19 வயதான இளைஞனே முறிகண்டி கோயிலுக்கு அருகே தவறிவிழுந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த இளைஞன் வவுனியா கோவில் புளியங்குளம் பகுதியச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முறிகண்டியில் பஸ் மிதிப் பலகையிலிருந்து தவறிவிழுந்த ஒருவர் உயிரிழப்பு
Reviewed by NEWMANNAR
on
September 15, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 15, 2014
Rating:


No comments:
Post a Comment