லண்டனில் ஜெயவாணி குழந்தைகளுடன் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது
லண்டனில் தமிழ் பெண்ணொருவர் தனது குழந்தைகள் இருவரை கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது.
அதன்படி, குழந்தைகள் தாயினால் மூச்சுத் திணற கொலை செய்யப்பட்டுள்ளதும் பின்னர் தாய் தற்கொலை செய்து கொண்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அனோபன் (வயது 5), நதிபன் வயது-8 மாதம்) ஆகிய இரு ஆண் பிள்ளைகளையும் கொன்று விட்டு, ஜெயவாணி என்ற பெண் தற்கொலை செய்துள்ளார்.
குறித்த பெண்ணின் கணவன் சக்திவேல் விக்னேஸ்வரன் (வயது 36) வீட்டுக்கு வந்தபோது மூவரும் சடலமாக கிடப்பதைக் கண்டு கொண்டார்.
கறுப்பு பைகளுக்குள் பிள்ளைகளின் சடலங்கள் போடப்பட்டு இருந்தன. மனைவியும் இறந்து காணப்பட்டார்.
வேலையில் இருந்து திரும்பி வந்த கணவன் இதைகண்டு பேரதிர்ச்சி அடைந்தார்.
இம்மரணங்களில் வேறு எவர் மீதும் பொலிஸாருக்கு சந்தேகம் இல்லை. குழந்தையின் பிறப்புக்கு பின்னரான மன அழுத்தத்தால் ஜெயவாணி பாதிக்கப்பட்டு இருக்கக் கூடும் என்று பொலிஸார் சந்தேகித்தனர்.
கழுத்து இறுக்கப்பட்ட்டமையே ஜெயவாணியின் மரணத்துக்கான காரணம் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
லண்டனில் ஜெயவாணி குழந்தைகளுடன் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்துள்ளது
Reviewed by NEWMANNAR
on
October 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 14, 2014
Rating:


No comments:
Post a Comment