மன்னார் தொங்கு பாலப் பகுதியில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டங்கள்.-photo
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குஞ்சுக்குளம் தொங்குபாலம் பகுதியில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு மாகாண முதலமைச்சரின் 5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
குஞ்சுக்குளம் தொங்குபால பகுதியில் புதிய தங்கும் விடுதி ஒன்றும்,மக்களின் போக்குவரத்திற்காக புதிய பாலம் ஒன்றும் குறித்த நிதியில் இருந்து அமைக்கப்பட்வுள்ளது.
இந்த நிலையில் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை(10) குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிட்டார்.
மன்னார் தொங்கு பாலப் பகுதியில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டங்கள்.-photo
Reviewed by NEWMANNAR
on
October 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 11, 2014
Rating:






No comments:
Post a Comment