அண்மைய செய்திகள்

recent
-

வன்னி விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்; சிவசக்தி ஆனந்தன்

வன்னி விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வறட்சி காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

போர் காரணமாக இந்த மக்கள் நீண்ட காலமாக சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர்.

மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள அரசாங்கம் எவ்வித உதவிகளையும் வழங்கவில்லை.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சலுகை விலை அடிப்படையில் எரிபொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இராணுவத்தினர் விவசாய நிலங்களை பலவந்தமாக கைப்பற்றிக்கொண்டுள்ளனர்.

இந்தக் காணிகளை விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வன்னி விவசாயிகள் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்; சிவசக்தி ஆனந்தன் Reviewed by NEWMANNAR on November 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.