உயர்தர பொருளியல் விஞ்ஞான வினாப்பத்திரம் குறித்த விசாரணைக்கு விசேட குழு
2014 கல்விப் பொதுத்தராதர உயர்தர பொருளியல் விஞ்ஞான வினாப்பத்திரம் குறித்து விசாரணை செய்வதற்காக, புத்திஜீவிகள் குழுவொன்றை பெயரிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மூன்று பேராசிரியர்களும், முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் ஒருவரும் குழுவிற்கு பெயரிடப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீபா மஹாநாமஹேவா குறிப்பிடுகின்றார்.
2014 உயர்தர பொருளியல் விஞ்ஞான வினாத்தாள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ள தரப்பினருடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது இந்த தீர்மானத்தை எடுத்ததாக மனித உரிமைகள் ஆணையாளர் கூறினார்.
உயர்தர பொருளியல் விஞ்ஞான வினாப்பத்திரம் குறித்த விசாரணைக்கு விசேட குழு
Reviewed by NEWMANNAR
on
December 13, 2014
Rating:

No comments:
Post a Comment