8 வயது சிறுவனை தனியாக வீட்டில் விட்டுச் சென்ற பெற்றோர், மறுநாள் அவரை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர்!!
வீட்டில் 8 வயது சிறுவனை தனியாக விட்டுச் சென்ற பெற்றோர், மறுநாள் அவரை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர்.
நுணாவில் மத்தியைச் சேர்ந்த ராஜகோபால் தர்சின் ஆகாஸ் (வயது 8) என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது,
சிறுவனின் பெற்றோர் இருவரும் தொழில் காரணமாக நேற்று சனிக்கிழமை சிறுவனை வீட்டில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர். மதியம் வீடு திரும்பிய பெற்றோர் சிறுவனைக் காணாது பல இடங்களிலும் தேடியுள்ளனர். எனினும் சிறுவனை கண்டுபடிக்கமுடியவில்லை.
இன்று மறுபடியும் தேடிய போது சிறுவன் வீட்டுக் கிணற்றில் சடலமாகக் காணப்பட்டுள்ளான். இதனையடுத்து சம்பவம் சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு, அங்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர். -
8 வயது சிறுவனை தனியாக வீட்டில் விட்டுச் சென்ற பெற்றோர், மறுநாள் அவரை கிணற்றில் இருந்து சடலமாக மீட்டனர்!!
Reviewed by NEWMANNAR
on
December 14, 2014
Rating:

No comments:
Post a Comment