யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஈபீடிபீ, தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இடையே கைகலப்பு

இதில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கே.சர்வேஸ்வரன் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமானது.
இதன்போது, ஏற்பட்ட வாதப், பிரதிவாதங்கள் பின்னர் கைகலப்பான மாறியது.
கைகலப்பை அடுத்து, வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தொடர்ந்தும் கூட்டம் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஈபீடிபீ, தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இடையே கைகலப்பு
Reviewed by NEWMANNAR
on
December 16, 2014
Rating:

No comments:
Post a Comment